Saturday, January 16, 2010

மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி செய்ய ஒரு பதிவு பார்த்தேன். சுட்டவுடன் சுடச்சுட.
நன்றி தமிழ் 25 பிளாக் ஸ்போட்.


மட்டன் பிரியாணி 8 பேருக்கு போதும்



தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கிலோ
ஆட்டுக் கறி (கிடா ஓகே) - 1 1/4 கிலோ
எண்ணெய் - 200 லீடர்

வெங்காயம் பெரியது - 8
தக்காளி - 3
தயிர் - 400 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 3 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 8
எலுமிச்சை பழம் பெரியது - 1
இலவங்கம் - 8
ஏலக்காய் - 8
பட்டை, பிரிஞ்சி இலை, குங்குமபூ - சிறிதளவு
பால் 1/2 கப்
கொத்தமல்லி , புதினா - ஒவ்வொரு கட்டு, (நான்கு பங்குகளாக)
உப்பு தேவையான அளவு


செய்முறை
வெங்காயத்தை நீட்டுவாக்கில் அரிந்து, அதின் பாதியை பொன்னிறமாக பொறித்து தனியாக வைத்துகொள்ளவும்.


அதே எண்ணையில் மீதமுள்ள வெங்காயத்தை வதக்கி, அதில் இஞ்சி பூண்டு விழுது , லேசாக அரிந்த 5 பச்சை மிளகாய், ஒரு பங்கு மல்லி, புதினா சேர்த்து மீண்டும் ஒரு நிமிஷம் வதக்கி, சுத்தம் செய்யப்பட ஆட்டுக்கறியை சேர்க்கவும்.


பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். நன்றாக அடிக்கப்பட்ட தயிரை சேர்க்கவும். கறியை சேர்க்கும்பொழுது நன்றாக கிளறி இந்த மசாலா சமமாக இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.


அரை கிளாஸ் தண்ணீரை சேர்க்கவும். வட்டமாக அறியப்பட்ட 3 தக்காளி சேர்க்கவும். மீண்டும் ஒரு பங்கு மல்லி புதினா சேர்க்கவும்.


அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.


கறி நன்ற்ர்க வேக 25 நிமிடங்கள் ஆகும். கறி வேகும்போது அடி பிடிக்காமல் இருக்க அடிக்கடி பார்த்துகொள்ளவும். நீர் குறைந்து மசாலாவும் கறியும் ஒன்றாக ஆகி கெட்டியாக இருக்கவேண்டும்.


இப்பொழுது எண்ணெய் மேலே மிதந்து கொண்டிருக்கும். இந்த எண்ணையை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து வைத்துகொள்ளவும்.
மற்றுமொரு பாத்திரத்தில் பாலில் குங்குமபூவை கரைத்து வைத்துகொள்ளவும்.


இப்பொழுது அரிசியை 20௦ நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.


ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதிவந்த பிறகு ஏலக்காய் இலவங்கம் பட்டை ஒரு பங்கு மல்லி புதினா போடவும். பிறகு ஊற வாய்த்த அரிசியை சேர்த்து கொஞ்சம் எண்ணெய், உப்பு சேர்த்து, நன்றாக கலக்கவும். கலக்கும்போது அரிசி உடையாமல் பார்த்து கொள்ளவும். அரிசி 60 விழுக்காடு மட்டும் வேகவேண்டும். வெந்த அரிசியை தண்ணீர் சுத்தமாக இல்லாமல் வடிகட்டி தனியாக வைக்கவும்.


இப்போது அரிசி வெந்த பாத்திரத்தை சுத்தமாக துடைத்து, அதில் ஒரு லேயர் அரிசி, அடுத்தலேயரில் கறியுடன் சேர்ந்த மசாலா, கொஞ்சம் குங்குமப்பூ கலந்த பால், எலுமிச்சை சாறு கலந்த எண்ணை, சிறிதளவு பொன்னிறமாக பொறித்த வெங்காயம், சிறிதளவு மல்லி புதினா சேர்க்கவும். மூன்றவது லேயர் மீண்டும் அரிசி, நான்காவது லேயர் மேலேகுறிப்பிட்ட மசாலா, ஐந்தாவது லேயர் அரிசி, ஆறாவது லேயர் மேலேகுறிப்பிட்ட மசாலா, கடைசியாக ஏழாவது லேயரில் அரிசி, அத்துடன் கொஞ்சம் பொன்னிறமாக பொறிக்கப்பட்ட வெங்காயம், மீதமுள்ள மல்லி, புதினா, குங்குமப்பூ கலந்த பால், எலுமிச்சை சாறு கலந்த எண்ணை, தூவி பாத்திரத்தை கொஞ்சமும் காற்று போகாதவண்ணம் தட்டில் ஒரு துணியை கொண்டு நன்றாக மூடி, தட்டின் மேல் ஒரு கனமான பொருளை வைத்து மிதமான சூட்டில் அடுப்பில் ஒரு தோசை கல்லைவைத்து அதன்மேல் இந்த பாத்திரத்தை வைக்கவும்.


25 நிமிடங்களுக்கு பிறகு பாத்திரத்தை திறந்து பார்த்தல் கமகமக்கும் ஆவியுடன் நமது சுவையான தம் மட்டன் பிரியாணி ரெடி.